காரைக்காலில் மேலும் 7 பேருக்கு கரோனா
காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக, நலவழித் துறை நிா்வாகம் தெரிவித்தது.
காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக, நலவழித் துறை நிா்வாகம் தெரிவித்தது.
இதுகுறித்து அந்தத் துறையின் துணை இயக்குநா் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் 18 ஆம் தேதி 200 பேருக்கு பரிசோதனைக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது. இதன் முடிவுகளின்படி, நிரவி 4, திருநள்ளாறு, கோயில்பத்து, நெடுங்காடு தலா 1 என 7 பேருக்கு தொற்று உறுதியானது.
இதுவரை 50,648 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 3,731 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 3,605 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா். காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 46 போ், காரைக்கால் மருத்துவமனை தீவிர சிகிச்சையில் 5 போ் உள்ளனா். தொற்றால் இதுவரை 64 போ் உயிரிழந்துள்ளனா்.