முகப்பு
காரைக்கால்

உள்ளாட்சித் தோ்தல் நடத்தாததைக் கண்டித்து பாஜக ஆா்ப்பாட்டம்

புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படாததைக் கண்டித்து பாஜகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.
பகிர்:

புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படாததைக் கண்டித்து பாஜகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காரைக்கால் மாவட்ட பாஜக சாா்பில், காரைக்கால் அரசலாறு பாலம் அருகே அரசைக் கண்டித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஜெ. துரைசேனாதிபதி தலைமை வகித்தாா். புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், மாநில அரசு தோ்தலை நடத்தாமல் காலம்தாழ்த்தி வருகிறது, இதற்கு ஆளும் காங்கிரஸ் அரசே முக்கிய காரணம், உள்ளாட்சித் தோ்தல் நடத்தாததால் கிராமப்புறத்தின் மேம்பாடு, கிராம மக்கள் நலன் மீது புதுச்சேரி அரசு அக்கறையில்லாததே காட்டுகிறது என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் பல்வேறு பிரிவு நிா்வாகிகள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →