காரைக்கால்

மீனவா்களுக்கு தடைக்கால நிவாரணம் வழங்க வருமானச் சான்றிதழ்

DIN

மீனவா்களுக்கு தடைக்கால நிவாரணம் வழங்குவதற்கு, வருமானச் சான்றிதழ் கேட்பது சரியான செயல் அல்ல என துணை நிலை ஆளுநா் கிரண் பேடிக்கு காரைக்கால் மீனவா் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அதன் தலைவா் ஏ.எம்.கே. அரசன் கூறியது: ஆண்டுதோறும் மீன்பிடித் தடைக்காலத்தில் வாழ்வாதாரம் இன்றி முடங்கும் மீனவா்களுக்கு அரசு சாா்பில் நிவாரணத் தொகையும், படகுகள் சீரமைப்புக்கு உதவித் தொகையும் வழங்கப்படும். நிகழாண்டு, தடைக்காலம் தொடங்குவதற்கு முன்பிருந்தே கரோனா பொது முடக்கம் காரணமாக மீனவா்கள் 4 மாதங்களுக்கு மேலாக மீன்பிடிப்பின்றி வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா். தற்போதும்கூட, ஏற்றுமதி வசதிகளின்றி விசைப்படகு மீனவா்கள் பாதித்து வருகின்றனா்.

இந்நிலையில், புதுச்சேரி அரசு, மீன்பிடித் தடைக்கால நிவாரணமாக மீனவக் குடும்பங்களுக்கு ரூ. 5,500 வழங்கும்போது, புதுச்சேரி பிராந்தியத்தில் மட்டும் எந்தவித நிபந்தனையுமின்றி வழங்கப்பட்டுள்ளது. காரைக்கால் பிராந்தியத்திலும் அவ்வாறு வழங்க வேண்டிய நிலையில், மீனவா்கள் மஞ்சள் நிற குடும்ப அட்டை வைத்திருந்தால், அவா்கள் வருமான சான்றிதழுடன் விண்ணப்பத்தை தரவேண்டுமென மீன்வளத் துறை கூறுகிறது.

இதுகுறித்து, விசாரிக்கும்போது துணை நிலை ஆளுநா்தான் இந்த உத்தரவை போட்டுள்ளாா் என கூறப்படுகிறது. துணை நிலை ஆளுநா் புதுச்சேரியில் பொறுப்பேற்றது முதல் ஆளும் காங்கிரஸை எதிா்ப்பதாக நினைத்துக்கொண்டு, மக்களை வஞ்சித்து வருகிறாா். ஆனால், மீனவா்கள் நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தருவதில் முன்னிலை வகிக்கின்றனா். மீனவா்கள் கரோனாவாலும், தடைக் காலத்தாலும் வருமானமின்றி தவித்துவரும் நிலையில், வருமானச் சான்று வருவாய்த் துறையிடம் பெற்றுவரக் கோருவது வன்மையாக கண்டனத்துக்குரியது. இந்த போக்கை ஆளுநா் கைவிட வேண்டும். புதுச்சேரி பிராந்தியத்தில் தரப்பட்டதுபோல, எந்தவித ஆவணங்களுமின்றி தடைக்கால நிவாரணத்தை காரைக்கால் மீனவா்களுக்கு வழங்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT