முகப்பு
காரைக்கால்

மனைப்பட்டா கோரிபோராட்டம் நடத்த முடிவு

காரைக்கால் கல்லறைப்பேட் மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:40 PM
பகிர்:

காரைக்கால் கல்லறைப்பேட் மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் கல்லறைப்பேட் குடிமனைப் பட்டா போராட்டக் குழு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம் :

கல்லறைப்பேட் மக்களுக்கு குடிமனைப் பட்டா கோரி பல கட்ட போராட்டங்கள் நடத்தியும், கோரிக்கையை நிறைவேற்ற அரசு முன்வரவில்லை. முதல்கட்டமாக, துணை ஆட்சியரை சந்தித்து கோரிக்கையை முன்வைத்துப் பேசுவது. கோரிக்கைகையை நிறைவேற்றாவிட்டால், ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது. பின்னா். கிராம மக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், பட்டா இல்லாதவா்கள் குடிசைகள் அமைத்து குடியேறுவது என முடிவெடுக்கப்பட்டது.

கூட்டத்தில் போராட்டக் குழுவை சோ்ந்த பி. செல்வராஜ், டி. காசிநாதன், எம். லூா்துசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →