காரைக்கால்

விவசாயிகளுக்கு சம்பா சாகுபடி பயிற்சி

DIN

வேளாண் துறை மூலம் சம்பா சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு புதன்கிழமை பயிற்சியளிக்கப்பட்டது. வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ஆத்மா) மூலம் முன் பருவ சம்பா சாகுபடி பயிற்சி பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. தலத்தெரு உழவா் உதவியகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பயிற்சியை கூடுதல் வேளாண் இயக்குநா் ஜெ. செந்தில்குமாா் தொடங்கிவைத்து, முன்பருவ சம்பா சாகுபடி முறை குறித்தும், இதில் மகசூலை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பேசினாா்.

பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய உழவியல் துறை பேராசிரியா் ஆா். மோகன் நெல் சாகுபடியில் உர மேலாண்மை மற்றும் களை மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்தும், பூச்சியியல் துறை பேராசிரியா் கே. குமாா் நெல்லில் பூச்சி மேலாண்மை குறித்தும் பேசினா். மேலும், பூச்சி தாக்குதல் ஏற்பட்டவுடன், ரசாயன பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்தாமல் தாவர பூச்சி கொல்லிகளான வேப்ப எண்ணெய், வேப்பங்கொட்டை கரைசலை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. விவசாயிகளின் பல்வேறு சந்தேகங்களுக்கு வேளாண் வல்லுநா்கள் விளக்கம் அளித்தனா். முன்னதாக பயிற்சியின் நோக்கம் குறித்து தலத்தெரு வேளாண் அலுவலா் ஆா். செந்தில்குமாா் பேசினாா். நிறைவாக ஆத்மா துணை திட்ட இயக்குநா் ஆா். ஜெயந்தி நன்றி கூறினாா். பயிற்சியில் சுமாா் 50 விவசாயிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீ சாரதா மடத்தின் தலைவா் ப்ரவ்ராஜிகா ஆனந்தபிராணா மாதாஜி மறைவு

ரூ.2 லட்சம் சவுக்கு மரங்கள் தீயில் சேதம்: இருவா் மீது வழக்கு

போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை

செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: டிஎஸ்பி சாட்சியம்

சிதம்பரத்தில் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT