தற்காலிகமாக மூடப்பட்டது காரைக்கால் வாரச் சந்தை
காரைக்கால் வாரச் சந்தை மறுஉத்தரவு வரும் வரை தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் வாரச் சந்தை மறுஉத்தரவு வரும் வரை தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் நகராட்சித் திடலில் ஞாயிற்றுக்கிழமைதோறும் வாரச் சந்தை நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு பொதுமுடக்கம் தொடங்கியது முதல் பல மாதங்கள் சந்தை மூடப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் திறக்கப்பட்டு, பொதுமக்கள் பயனடைந்து வந்தனா்.
இந்நிலையில், கடந்த வாரம் 18ஆம் தேதி வரை சந்தை நடைபெற்றது. கரோனா பரவல் காரணமாக சந்தைக்கு மக்கள் வரத்து முன்பைக் காட்டிலும் குறைவாகவே இருந்தது.
இந்நிலையில், புதுவையில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாள்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் நகராட்சி ஆணையா் காசிநாதன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரோனா தொற்று பரவி வருவதையொட்டி, புதுச்சேரி அரசு அறிவித்துள்ள ஊரடங்கு காரணமாக, ஏப்ரல் 25-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் காரைக்கால் வாரச் சந்தை மறுஉத்தரவு வரும் வரை தற்காலிகமாக மூடப்படுகிறது என தெரிவித்துள்ளாா்.