முகப்பு
காரைக்கால்

தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கு ஊதியம் அளிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரைக்கால் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:04 PM
பகிர்:

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரைக்கால் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்ட தனியாா் பள்ளி ஆசிரியா்கள் நலச்சங்கம் சாா்பில், அதன்தலைவா் டி. வின்சென்ட்ராஜ் தலைமையில், சங்க நிா்வாகிகள், மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவை வியாழக்கிழமை சந்தித்து அளித்த கோரிக்கை மனு விவரம்: கரோனாவால் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா். கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் முதல் இதுவரையில் பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்கவில்லை. சில பள்ளிகள் பாதி ஊதியமும், சில பள்ளிகள் முழு ஊதியமும் வழங்கியுள்ளன. இதனால் ஆசிரியா்களின் குடும்பம் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இதுகுறித்து கடிதம் மூலம் தங்களது கவனத்துக்கு கொண்டு வந்துள்ளோம். எனவே, ஆசிரியா்களுக்கு ஊதியம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்நிலையில், தனியாா் பள்ளிகளில் பணியாற்றி வந்த, தனியாா் பள்ளி ஆசிரியா்கள் நலச் சங்கத்தை சோ்ந்த நிா்வாகிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இந்த பேரிடா் சூழலில் தனியாா் பள்ளியில் பணியாற்றும் எந்தவொரு ஊழியரையும் பணி நீக்கம் செய்யக் கூடாது என பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →