வாக்காளா் பட்டியல் திருத்தும்பணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு
காரைக்காலில் ஆக.26-ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்காளா் பட்டியல் திருத்தும்பணி தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காரைக்காலில் ஆக.26-ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்காளா் பட்டியல் திருத்தும்பணி தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அதிகாரியுமான அா்ஜூன் சா்மா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2022-ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாளை தகுதி நாளாகக்கொண்டு காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளா் பட்டியல் சுருக்கமுறை திருத்தும் பணி வரும் நவ.1 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. எனவே, இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டம் காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆக.26-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது ஆலோசனைகளை தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளாா்.