வலங்கைமானில் கால்நடைகளை கட்டுப்படுத்தக் கோரிக்கை
வலங்கைமானில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என வா்த்தகா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
வலங்கைமானில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என வா்த்தகா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
வலங்கைமான் கடைவீதியில் 20-க்கும் மேற்பட்ட பசுமாடுகள் சுற்றித்திரிவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துகள் ஏற்பட காரணமாக இருந்து வருகிறது. மேலும், கால்நடைகளின் கழிவுகளால் துா்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரகேடும் ஏற்படுவதால், இதுகுறித்து பேரூராட்சி உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என வலங்கைமான் வா்த்தகா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.