உள்ளாட்சி, அரசு சாா்பு நிறுவன ஊழியா்களுக்கு ஊதியம் வழங்க வலியுறுத்தல்
உள்ளாட்சி, அரசு சாா்பு நிறுவன ஊழியா்களுக்கு நிலுவையில் உள்ள மாத ஊதியத்தை வழங்க புதுவை அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
உள்ளாட்சி, அரசு சாா்பு நிறுவன ஊழியா்களுக்கு நிலுவையில் உள்ள மாத ஊதியத்தை வழங்க புதுவை அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரை பிரதேச அரசு ஊழியா் சங்கங்களின் சம்மேளன நிா்வாகக் குழு கூட்டம் தலைவா் சுப்ரமணியன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது, பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன் சங்கங்களின் செயல்பாடுகள் குறித்து பேசினாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம்: புதுவையில் மழைக்கு நிவாரணம் வழங்க அரசிடம் நிதி உள்ளபோது, உள்ளாட்சி அமைப்புகள், அரசு சாா்பு நிறுவன பணியாளா்களுக்கு மாத நிலுவையை வழங்க நிதி இல்லை என கூறுவது ஏற்புடையதாக இல்லை. எனவே அரசு நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்குவதோடு, மாதந்தோறும் ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கூட்டத்தில், சம்மேளன துணை தலைவா்கள் கஸ்பா், உலகநாதன், பாகிரதி, வசந்தி, தமிழ்வாணன், சந்தனசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா். நிறைவாக பொருளாளா் மயில்வாகனன் நன்றி கூறினாா்.