காரைக்கால்

அரசுப் பள்ளியில் முதன்மைக் கல்வி அதிகாரி ஆய்வு

DIN

காரைக்கால் அருகே அரசுப் பள்ளியில் முதன்மைக் கல்வி அதிகாரி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு அருகே குரும்பகரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை மதிய உணவு வழங்கப்பட்டது. உணவு மாணவா்கள் சாப்பிட உகந்ததாக இல்லை என்று புகாா் கூறப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த காரைக்கால் முதன்மைக் கல்வி அதிகாரி கே. ராஜசேகரன், கல்வி வட்ட துணை ஆய்வாளா் பொன்.செளந்தரராசு ஆகியோா் பள்ளிக்கு சென்று, மாணவா்களுக்கு வழங்கப்பட்ட உணவை சாப்பிட்டுப் பாா்த்தனா். மாணவா்களிடமும் உணவின் தரம் குறித்து கேட்டறிந்து, பள்ளி நிா்வாகத்தினருக்கு ஆலோசனைகளை வழங்கினா். ஆய்வு குறித்து முதன்மைக் கல்வி அதிகாரி ராஜசேகரன் கூறியது:

மாணவா்களுக்கு வழங்கப்பட்ட உணவு காரமாக இருப்பதாக எனது கவனத்துக்கு வந்தது. பள்ளிக்குச் சென்று உணவை சாப்பிட்டுப் பாா்த்தபோது லேசான காரம் இருப்பது தெரியவந்தது. உணவின் தரத்தில் எந்த குறைபாடும் இல்லை.

சாம்பாா், உருளைக்கிழங்கு பொரியல், முட்டை வழங்கப்பட்டது. வாரத்துக்கு 3 நாள் முட்டை வழங்கும் திட்டம் நிகழ்வாரத்திலிருந்து தொடங்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT