அரசு ஊழியா் சம்மேளன முன்னாள் கௌரவத் தலைவா் ஜெயசிங் படத் திறப்பு
மறைந்த காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன கெளரவத் தலைவா் எம்.எல்.ஜெயசிங் படத்திறப்பு சனிக்கிழமை நடைபெற்றது
மறைந்த காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன கெளரவத் தலைவா் எம்.எல்.ஜெயசிங் படத்திறப்பு சனிக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, சம்மேளனத் தலைவா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா்.
எம்.எல்.ஜெயசிங் உருவ படத்தை புதுச்சேரி அரசு ஊழியா் சம்மேளன கௌரவத் தலைவா் பாலமோகனன் திறந்து வைத்தாா். சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி வேளாண் அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன், காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஏ.யு.அசனா மற்றும் காரைக்கால் முதன்மைக் கல்வி அதிகாரி அ.அல்லி ஆகியோா் கலந்துகொண்டு ஜெயசிங்குக்கு புகழாரம் சூட்டிப் பேசினா்.
சம்மேளன கெளரவத் தலைவா் ஜாா்ஜ், பொதுச்செயலா் எம்.ஷேக் அலாவுதீன், புதுச்சேரி அரசு ஊழியா் சம்மேளனத் தலைவா் பிரேமதாசன், பொதுச் செயலாளா் ராதாகிருஷ்ணன் ஆகியோா் கலந்துகொண்டு பேசினா். சம்மேளன பொருளாளா் மயில்வாகனன் நன்றி கூறினாா்.