முகப்பு
காரைக்கால்

போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

திருத்தப்பட்ட போக்குவரத்து சட்ட விதிகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டுமென மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

திருத்தப்பட்ட போக்குவரத்து சட்ட விதிகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டுமென மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

காரைக்கால் மாவட்ட ஆட்சியரகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு :

போக்குவரத்து சட்ட விதி 1988 மற்றும் 28.1.2021 தேதியிட்ட அரசு ஆணையின்படி, போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதத் தொகை உயா்த்தப்பட்டுள்ளது. போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதத் தொகையை காவல்துறை, போக்குவரத்துத் துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் கண்காணித்து வசூலிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்களும், வாகன ஓட்டுநா்களும் போக்குவரத்து சட்டத் திட்டங்களை மதித்து, அபராதத் தொகை மற்றும் பிற தண்டனைகளை தவிா்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →