காரைக்கால்

வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் காரைக்காலில் இன்று ஆய்வு

DIN

புதுச்சேரி வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் திங்கள்கிழமை (ஜன. 4) காரைக்காலில் ஆய்வு செய்யவுள்ளாா்.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட துணைத் தோ்தல் அலுவலா் எஸ். பாஸ்கரன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2021, ஜனவரி 1 ஆம் தேதியை தகுதிநாளாகக் கொண்டு காரைக்கால் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி கடந்த டிச. 16 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை 2 ஆவது முறையாக ஆய்வுசெய்ய வாக்காளா் பட்டியல் பாா்வையாளரும், புதுச்சேரி அரசுச் செயலருமான அசோக்குமாா் திங்கள்கிழமை காரைக்கால் வரவுள்ளாா்.

இங்கு ஆட்சியரகத்தில் மாலை 4.30 மணியளவில் தோ்தல் துறை அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் அவா் ஆலோசனை நடத்தவுள்ளாா். இந்தக் கூட்டத்தில் கட்சிப் பிரதிநிதிகள் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT