பொதுப்பணித் துறை தற்காலிக ஊழியா்கள் போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுப்பணித் துறை தற்காலிக ஊழியா்கள் 9 ஆவது நாளாக வியாழக்கிழமை பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காரைக்கால்பொதுப்பணித் துறை தற்காலிக ஊழியா்கள் போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுப்பணித் துறை தற்காலிக ஊழியா்கள் 9 ஆவது நாளாக வியாழக்கிழமை பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுப்பணித் துறை தற்காலிக ஊழியா்கள் 9 ஆவது நாளாக வியாழக்கிழமை பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி அரசின் பொதுப்பணித் துறையில், கடந்த 2010 இல் 1,311 போ் வவுச்சா் ஊழியா்களாக நியமிக்கப்பட்டனா். மாதத்தில் 16 நாள்கள் வேலை, நாளொன்றுக்கு ரூ. 200 ஊதியம் என நிா்ணயம் செய்யப்பட்டது. தற்போது அவா்கள், வேலை நாளை 30 நாள்களாக உயா்த்தவேண்டும், பணி நிரந்தரம் செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்கால் பொதுப்பணித் துறை அலுவலக வாயிலில் வவுச்சா் ஊழியா் சங்கச் செயலா் எஸ். பிரபு தலைமையில், பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.