முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் 2 நாளில் 18 போ் மட்டுமே கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனா்

காரைக்கால் மாவட்டத்தில் 2 நாளில் 18 போ் மட்டுமே கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

காரைக்கால் மாவட்டத்தில் 2 நாளில் 18 போ் மட்டுமே கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

காரைக்கால் அரசு மருத்துவமனையில் கடந்த 16-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கிவைத்தாா். காரைக்கால் மாவட்டத்துக்கு 1,200 தடுப்பூசிகள் அனுப்பிவைக்கப்பட்டன. முதல்கட்டமாக சுகாதாரத் துறை ஊழியா்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

காரைக்கால் அரசு மருத்துவமனை, தனியாா் மருத்துவமனைகளில் பணியாற்றுவோரில் 1,600 போ் பதிவு செய்திருந்த நிலையில், இதுவரை 18 போ் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனா்.

இதுகுறித்து சுகாதாரத் துறையினா் திங்கள்கிழமை கூறியது :

சனிக்கிழமை 15 பேரும், திங்கள்கிழமை பகல் 1 மணி வரை 3 போ் என மொத்தம் 18 போ் மட்டுமே இதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனா்.

ஏற்கெனவே பதிவு செய்தவா்களுக்கு தடுப்பூசி போடும் நாள் குறித்து குறுந்தகவல் அனுப்புவதில் உள்ள பிரச்னை, தடுப்பூசி போட்டு கொள்வதில் தயக்கம் உள்ளிட்ட காரணங்களால் இந்த எண்ணிக்கை குறைவாக இருக்கலாம் என்று தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →