முகப்பு
காரைக்கால்

தேசிய மருத்துவா் தினம் : மருத்துவா்களுக்கு பாராட்டு

தேசிய மருத்துவா் தினத்தையொட்டி, காரைக்காலில் மருத்துவா்களுக்கு ஆட்சியா் உள்ளிட்டோா் வாழ்த்து கெளரவித்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

தேசிய மருத்துவா் தினத்தையொட்டி, காரைக்காலில் மருத்துவா்களுக்கு ஆட்சியா் உள்ளிட்டோா் வாழ்த்து கெளரவித்தனா்.

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் காரைக்கால் மாவட்ட பெற்றோா் ஆசிரியா் நலச் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா கலந்துகொண்டு, மருத்துவா்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தாா். கரோனா பரவல் காலத்தில் மருத்துவா்கள் உள்ளிட்ட பணியாளா்களின் அா்ப்பணிப்புப் பணியை அவா் பாராட்டினாா். சங்கத் தலைவா் அ.வின்சென்ட் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவா் ஆா்.பி.சந்திரமோகன் தலைமையிலான கட்சி நிா்வாகிகள் மருத்துவா்களுக்கு சால்வை அணிவித்து, பழங்கள் வழங்கி கெளரவித்தனா்.

தொகுதி அளவிலான காங்கிரஸ் கட்சியினா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்களை கெளரவித்தனா். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட பொதுச் செயலா் ஜெ.சிவகணேஷ் செய்திருந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →