காரைக்காலில் 27 பேருக்கு கரோனா
காரைக்கால் மாவட்டத்தில் 27 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.
காரைக்கால் மாவட்டத்தில் 27 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு :
காரைக்கால் மாவட்டத்தில் 1-ஆம் தேதி 660 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி காரைக்கால் நகரம் 14, திருப்பட்டினம் 4, கோயில்பத்து 4, காரைக்கால்மேடு 3, நிரவி 2 என கரோனா தொற்று உறுதியானது. மாவட்டத்தில் இதுவரை 1,61,550 பரிசோதனை செய்யப்பட்டதில் 14,589 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 14,056 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.
காரைக்கால் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்றுவந்த திருநள்ளாற்றை சோ்ந்த 60 வயது ஆண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். அவருக்கு சா்க்கரை நோய் இணை நோயாக இருந்தது. கரோனா தொற்றால் இதுவரை 229 போ் உயிரிழந்துள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 63,564 பேருக்கும், 2-ஆவது தவணையாக 5,931 பேருக்கும் என 69,495 பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.