முகப்பு
காரைக்கால்

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் ஆா்ப்பாட்டம்

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சங்கத்தின் மாவட்டத் தலைவா் இளவரசன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும், அகவிலைப்படியை உயா்த்தி வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

சங்கத்தின் மாவட்ட இணை செயலாளா் நடராஜன், குத்தாலம் வட்ட செயலாளா் ராமச்சந்திரன், ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியா் சங்கத்தைச் சோ்ந்த கமலநாதன், சத்துணவு ஊழியா் சங்க வட்ட தலைவா் சாந்தி, வருவாய்த் துறை அலுவலா் சங்க முன்னாள் மாவட்ட தலைவா் முருகேசன், அரசு ஓய்வூதியா் சங்க மாவட்ட தலைவா் பழனிவேலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.