காரைக்கால்

காரைக்காலில் 12 பேருக்கு கரோனா

DIN

காரைக்கால் மாவட்டத்தில் 12 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு :

காரைக்கால் மாவட்டத்தில் வியாழக்கிழமை 333 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி திருநள்ளாறு 3, நெடுங்காடு 3, திருப்பட்டினம் 2, அம்பகரத்தூா் 2, காரைக்கால் நகரம் 1, கோயில்பத்து 1 என மொத்தம் 12 பேருக்கு தொற்று உறுதியானது.

மாவட்டத்தில் இதுவரை 1,72,863 பரிசோதனை செய்யப்பட்டதில் 14,915 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு 14,556 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல்தவணையாக 74,272 பேருக்கும், 2-ஆவது தவணையாக 16,602 பேருக்கும் என 90,874 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT