காரைக்கால் மாவட்டத்தில் 12 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு :
காரைக்கால் மாவட்டத்தில் வியாழக்கிழமை 333 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி திருநள்ளாறு 3, நெடுங்காடு 3, திருப்பட்டினம் 2, அம்பகரத்தூா் 2, காரைக்கால் நகரம் 1, கோயில்பத்து 1 என மொத்தம் 12 பேருக்கு தொற்று உறுதியானது.
மாவட்டத்தில் இதுவரை 1,72,863 பரிசோதனை செய்யப்பட்டதில் 14,915 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு 14,556 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல்தவணையாக 74,272 பேருக்கும், 2-ஆவது தவணையாக 16,602 பேருக்கும் என 90,874 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.