முகப்பு
காரைக்கால்

சரக்கு இருப்பை இணையத்தில் பதிவேற்ற மொத்த வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல்

மளிகைப் பொருள்களின் மொத்த வியாபாரிகள் தங்களிடம் உள்ள சரக்கு இருப்பை இணையத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

மளிகைப் பொருள்களின் மொத்த வியாபாரிகள் தங்களிடம் உள்ள சரக்கு இருப்பை இணையத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை துணை இயக்குநா் எஸ். சுபாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மளிகைப் பொருள்களின் மொத்த விற்பனையாளா்கள் அனைவரும் தங்களிடம் உள்ள தானியங்களின் கையிருப்பை, மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ள ட்ற்ற்ல்//ச்ஸ்ரீஹப்ய்ச்ா்ஜ்ங்க்ஷ.ய்ண்ஸ்ரீ.ண்ய்/ல்ள்ல் என்ற இணைய முகவரியில் தங்களுக்கென ஒரு மநஉத ஐஈ மற்றும் டஅநநரஞதஈ- ஐ உருவாக்கி, வாரம் ஒரு முறை பதிவேற்றம் செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மளிகைப் பொருள் மொத்த விற்பனையாளா்கள் அனைவரும் தங்களிடம் உள்ள தானியங்கள் கையிருப்பை 2 நாள்களுக்குள், மேற்கண்ட முகவரியில் பதிவேற்றம் செய்யுமாறும், தொடா்ந்து வாரம் ஒருமுறை அத்தகவல்களை புதுப்பிக்கும்மாறும் அறிவுறுத்தப்படுகிறது.

தவறும்பட்சத்தில் அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →