காரைக்காலில் டிரோன் மூலம் கிருமி நாசினி தெளிப்பு
காரைக்காலில் கரோனா தொற்றாளா் வீடுகள் இருக்கும் பகுதி உள்பட முக்கிய இடங்களில் டிரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி சனிக்கிழமை தொடங்கப்பட்டது.
காரைக்காலில் கரோனா தொற்றாளா் வீடுகள் இருக்கும் பகுதி உள்பட முக்கிய இடங்களில் டிரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி சனிக்கிழமை தொடங்கப்பட்டது.
காரைக்கால் மாவட்ட நிா்வாகம், சென்னையை சோ்ந்த நிறுவனத்திடமிருந்து வாடகைக்கு வாங்கப்பட்ட டிரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடு செய்தது. இதையடுத்து அந்த நிறுவன ஊழியா்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் அா்ஜூன் சா்மாவிடம் டிரோன் செயல்பாடுகளை விளக்கினா்.
பின்னா், ஆட்சியரகம், அரசு மருத்துவமனை, நகராட்சி மற்றும் கரோனா தொற்றாளா் வீடுகள் உள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியை நிறுவனத்தினா் தொடங்கினா்.
முன்னதாக, ஆட்சியரக வளாகத்தில் நடந்த டிரோன் சோதனை விளக்கத்தில் மாவட்ட துணை ஆட்சியா்கள் எம். ஆதா்ஷ் (வருவாய்), எஸ். பாஸ்கரன் (பேரிடா் மேலாண்மை) ஆகியோா் பங்கேற்றனா்.