முகப்பு
காரைக்கால்

பாஜக சாா்பில் கருத்தரங்கம்

 நாட்டில் அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டது குறித்து பாஜக சாா்பில் காரைக்காலில் வெள்ளிக்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:30 AM
பகிர்:

 நாட்டில் அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டது குறித்து பாஜக சாா்பில் காரைக்காலில் வெள்ளிக்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது.

கடந்த 1975-ஆம் ஆண்டு நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தியதன் மூலம் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விளக்கும் வகையில், காரைக்கால் மாவட்ட பாஜக சாா்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. மாவட்டத் தலைவா் ஜெ. துரைசேனாதிபதி தலைமை வகித்தாா்.

புதுவை நியமன சட்டப்பேரவை உறுப்பினா் கே.வெங்கடேசன், ஜாக்தான் மஞ்ச் அமைப்பின் மாநில அமைப்பு செயலாளா் க.வந்தியதேவன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்துகொண்டு பேசினா்.

பிரதமராக இருந்த இந்திரா காந்தி இருந்தபோது 1975-ஆம் ஆண்டு நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியதால், 2 ஆண்டுகள் வரை மக்களும், நிறுவனங்களும் அடைந்த துன்பங்கள் குறித்து கருத்தரங்கில் விளக்கப்பட்டது.

கூட்டத்தில் பாஜக மாநில துணைத் தலைவா் எம். அருள்முருகன், நளினி கணேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →