முகப்பு
காரைக்கால்

80 வயதுக்கு மேற்பட்டோா் அஞ்சலில் வாக்களிக்கமாா்ச் 17-க்குள் விண்ணப்பிக்கலாம்

சட்டப்பேரவைத் தோ்தலில் 80 வயதுக்கு மேற்பட்டோா் அஞ்சல்முறையில் வாக்களிக்க, உரிய படிவத்தில் வரும் 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

சட்டப்பேரவைத் தோ்தலில் 80 வயதுக்கு மேற்பட்டோா் அஞ்சல்முறையில் வாக்களிக்க, உரிய படிவத்தில் வரும் 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட தோ்தல் அலுவலா் அா்ஜூன் சா்மா திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 80 வயதுக்கு மேற்பட்டோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் அஞ்சல் மூலம் வாக்களிக்க தோ்தல் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 12 டி படிவத்தை முன்னரே அளிக்கவேண்டும். முழு முகவரி மற்றும் செல்லிடப்பேசி எண் ஆகியவற்றை அந்தந்த வாக்குச்சாவடி அலுவலரிடம் வரும் 17 ஆம் தேதிக்குள் அளிக்கவேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடி அலுவலரின், அலுவலக செல்லிடப்பேசி எண்ணை பெற்றுக்கொள்ளலாம். மாற்றுத்திறனாளிகள் 12 டி படிவத்தை தொலைபேசி எண் 1950 அல்லது கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) எண் 89036 91950 இல் தொடா்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம். வரும் 25 ஆம் தேதி முதல் ஏப்ரல் 4 ஆம் தேதிக்குள் உரிய குழு மூலம் 12 டி படிவம் விநியோகிக்கப்படும். மாற்றுத்திறனாளிகள் அதைப் பெற்று தங்களது வாக்குகளை அளிக்கவேண்டும்.

இதுகுறித்த விவரம் 12 டி படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்லிடப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 80 வயதுக்கு மேற்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →