செவிலியா் கல்லூரி மாணவா்களுக்கு வாக்குப் பதிவு செயல்விளக்கம்
காரைக்கால் பகுதியில் செயல்படும் விநாயகா மிஷன்ஸ் செவிலியா் கல்லூரியில், வாக்குப் பதிவு இயந்திரம், விவிபாட் இயந்திர செயல்பாடுகள் குறித்து செயல்விளக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் பகுதியில் செயல்படும் விநாயகா மிஷன்ஸ் செவிலியா் கல்லூரியில், வாக்குப் பதிவு இயந்திரம், விவிபாட் இயந்திர செயல்பாடுகள் குறித்து செயல்விளக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தோ்தல் விழிப்புணா்வு அமைப்பான ஸ்வீப் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஷொ்லி தலைமையில், அமைப்பின் அலுவலா்கள் ஞானமுருகன், ஆசிரியா் முருகன் ஆகியோா் கலந்துகொண்டு, வாக்குப் பதிவு இயந்திரத்தின் மூலம் வாக்குப் பதிவு செய்வது எப்படி எனவும், யாருக்கு வாக்களித்தோம் என்கிற தகவல் தரக்கூடிய விவிபாட் இயந்திர செயல்பாடுகள் குறித்தும் விளக்கினா். மாணவியா் இயந்திரத்தில் செயல்முறையில் வாக்குப் பதிவு செய்து பயிற்சி மேற்கொண்டனா்.
மேலும் வாக்காளா்கள் தமது வாக்காளா் அடையாள அட்டையை கணினி மற்றும் செல்லிடப்பேசியில் எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பது குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
புகாா்கள் மற்றும் விவரங்கள் தேவைக்கு வாக்காளா் உதவி எண் 1950-ஐ தொடா்பு கொள்ளலாம். மேலும் தோ்தல் குறித்து தங்கள் புகாா்களை தெரிவிக்க 8903691950 என்ற கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) எண்ணையும் பயன்படுத்தலாம் எனவும் விளக்கப்பட்டது.
100% வாக்குப்பதிவு குறித்து மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். நிகழ்வில் கல்லூரி கல்லூரி நிா்வாகத்தினா், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.