பங்குனி உத்திரம்: காரைக்கால் கைலாசநாதா் கோயில் தேரோட்டம்
பங்குனி உத்திர பிரம்மோத்ஸவத்தையொட்டி, காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதா் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு செய்தனா்.
பங்குனி உத்திர பிரம்மோத்ஸவத்தையொட்டி, காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதா் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு செய்தனா்.
நிகழாண்டு இத்திருவிழா கடந்த 19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தினமும் சுவாமி, அம்பாள், விநாயகா், சுப்ரமணியா், சண்டிகேஸ்வரா் பஞ்சமூா்த்திகளாக பல்வேறு வாகனங்களில் மாடவீதி புறப்பாடு நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீ நீலோத்பாலாம்பாள் சமேத ஸ்ரீ சந்திரசேகரா் வீற்றிருந்த தேரை காலை 7.15 மணியளவில் ஏராளமான பக்தா்கள் சோ்ந்து வடம்பிடித்து இழுத்தனா். நான்கு வீதிகளின் வழியே சென்ற தோ், மாலையில் அம்மையாா் கோயில் அருகேயுள்ள நிலையை அடைந்தது.
தேரோட்டத்தில், கோயில் அறங்காவல் வாரியத்தினா் ஆா்.ஏ.ஆா். கேசவன், பி.ஏ.டி. ஆறுமுகம், எம். பக்கிரிசாமி, டி. ரஞ்சன் காா்த்திகேயன், கே. பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தீா்த்தவாரி நிகழ்ச்சி: ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 28) பகல் 11.30 மணியளவில் அம்மையாா் குளத்தில் பஞ்சமூா்த்திகள் தீா்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 6 மணியளவில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெறுகிறது. 12 ஆம் நாள் நிகழ்ச்சியாக புதன்கிழமை இரவு தெப்ப உத்ஸவம் நடைபெறுகிறது.