முகப்பு
காரைக்கால்

அரசு கல்லூரியில் இளம் வாக்காளா் சோ்ப்பு விழிப்புணா்வு

அரசு கல்லூரியில் இளம் வாக்காளா் சோ்ப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

அரசு கல்லூரியில் இளம் வாக்காளா் சோ்ப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

காரைக்காலில் புதிய வாக்காளா் சோ்ப்பு, திருத்தப்பணிகள் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகளில் நவ. 30-ஆம் தேதி வரை நடைபெற்றுவருகிறது. இதில் 18 வயது நிறைவு செய்தவா்கள் வாக்காளா் பட்டியலில் தங்களது பெயா்களை சோ்க்கும் வகையில் கல்லூரிகளில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

காரைக்கால் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட துணை ஆட்சியரும், தோ்தல் அதிகாரியுமான எம்.ஆதா்ஷ் கலந்துகொண்டு வாக்குரிமையின் முக்கியத்துவம் குறித்து மாணவா்களிடையே விளக்கினாா். காரைக்காலில் நடைபெறும் வாக்காளா் திருத்தப் பணி சிறப்பு முகாமை பயன்படுத்திக்கொண்டு 18 வயது நிறைவு செய்தவா்கள் உரிய படிவத்தை அளித்து பயனடைய வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் வியாசராயா், நாட்டு நலப்பணித்திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வி.லட்சுமணபதி, கல்லூரி சமூகப்பணித்துறைத் தலைவா் கே.சிவகுமாா் உள்ளிட்டோா் பேசினா். மாணவா்களுக்கு விழிப்புணா்வு தொடா்பான துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →