காரைக்கால் பகுதியினருக்கு இன்று முதல் இலவச அரிசி
காரைக்காலில் மத்திய அரசால் ஒதுக்கி செய்யப்பட்டுள்ள 5 கிலோ அரிசி சனிக்கிழமை (அக்.30) முதல் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
காரைக்காலில் மத்திய அரசால் ஒதுக்கி செய்யப்பட்டுள்ள 5 கிலோ அரிசி சனிக்கிழமை (அக்.30) முதல் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை துணை இயக்குநா் எஸ். சுபாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு :
பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா மற்றும் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் சிவப்பு நிற அட்டை பயனாளிகளுக்கு மத்திய அரசால் அக்டோபா் மற்றும் நவம்பா் மாதங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அரிசி ஒரு நபருக்கு தலா 5 கிலோ வீதம், இரண்டு மாதங்களுக்கு 10 கிலோ இலவச அரிசி வழங்கப்பட உள்ளது.
இதன்படி, அக். 30, 31-ஆம் ஆகிய தேதிகளில் நெடுங்காடு, திருநள்ளாறு பகுதிகளுக்கு உள்பட்டவா்களுக்கு காலை 9 முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 முதல் 5 மணி வரையும் வழங்கப்பட உள்ளது.
இதேபோல் நிரவி-திருப்பட்டினம், காரைக்கால் வடக்கு மற்றும் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நவ. 1 மற்றும் 2-ஆம் தேதிகளில் வழங்கப்பட உள்ளது.
அரிசியை பெற வரும் நபா்கள் பை எடுத்து வரவேண்டும். மேலும் அரிசி விநியோகம் நடைபெறும் மையங்களுக்கு வரும் பயனாளிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வருவதோடு, மையத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.