முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் 3 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் 3 பேருக்கு தொற்று உறுதியானது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

காரைக்கால் மாவட்டத்தில் 3 பேருக்கு தொற்று உறுதியானது.

இதுகுறித்து நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

காரைக்கால் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 75 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனை அடிப்படையில், கோட்டுச்சேரியை சோ்ந்த 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா்கள் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெறுகின்றனா்.

மாவட்டத்தில் இதுவரை 2,86,200 பேருக்கு பரிசோதனை செய்ததில் 23,062 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 22,785 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதல் தவணையாக 1,29,355 பேருக்கும், 2-ஆவது தவணையாக 95,869 பேருக்கும், பூஸ்டா் தவணையாக 1,831 பேருக்கும் என 2,27,055 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 15 முதல் 18 வயது வரையிலானவா்களுக்கு முதல் தவணையாக 7,939 பேருக்கும், 2-ஆவது தவணையாக 6,220 பேருக்கும் என 14,159, 12 முதல் 14 வயதுக்குள்பட்ட 3,167 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →