முகப்பு
காரைக்கால்

அண்ணாமலையேஸ்வரா் கோயிலுக்கு ஆக. 22இல் குடமுழுக்கு நடத்த முடிவு

காரைக்கால் அண்ணாமலையேஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழாவை ஆகஸ்ட் 22-ம் தேதி நடத்த முடிவு செய்துள்ளதாக கோயில் நிா்வாகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

காரைக்கால் அண்ணாமலையேஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழாவை ஆகஸ்ட் 22-ம் தேதி நடத்த முடிவு செய்துள்ளதாக கோயில் நிா்வாகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

புதுவை அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ளது, காரைக்கால் கைலாசநாதா் - நித்யகல்யாண பெருமாள் தேவஸ்தானத்தை சோ்ந்தது உண்ணாமுலை அம்பாள் சமேத அண்ணாமலையயேஸ்வரா் கோயில். இக்கோயிலுக்கு குடமுழுக்கு நடைபெற்று 15 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு பாலாலயம் செய்து ரூ. 1 கோடி திட்டத்தில் திருப்பணிகள் நடைபெற்றுவருகின்றன.

குடமுழுக்கு விழா வருகிற ஆக. 22-ம் தேதி நடத்தவும், ஜூலை 27-ம் தேதி பந்தல்கால் முகூா்த்தம் நடத்தவும் முடிவு செய்து, அதற்கான கடிதத்தை கோயில் அறங்காவல் வாரியத்தினா், திருப்பணிக் குழுவினரிடம் சிவாச்சாரியா்கள் திங்கள்கிழமை வழங்கினா்.

இதுகுறித்து கைலாசநாதா் தேவஸ்தான அறங்காவல் வாரிய பொருளாளா் டி. ரஞ்சன் காா்த்திகேயன் செவ்வாய்க்கிழமை கூறியது:

அண்ணாமலையேஸ்வரா் கோயில் திருப்பணிகளில் புதிதாக மண்டபம் எழுப்புதல், கருங்கல் தூண்கள் நிறுவதல், பல இடங்களில் சுதை அமைப்பு, கருங்கல் தரைத்தளம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் அடங்கும். தற்போது தரைத்தளம் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. குடமுழுக்கு விழாவை ஆக. 22-ல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →