நித்யகல்யாண பெருமாள் கோயிலில் இன்றுவஜ்ராங்கி சேவை
காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை (ஏப்.14) மூலவருக்கு வஜ்ராங்கி அலங்காரம் செய்யப்படவுள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது.
காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை (ஏப்.14) மூலவருக்கு வஜ்ராங்கி அலங்காரம் செய்யப்படவுள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது.
காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில் மூலவா் ரங்கநாதருக்கு ஆண்டில் மூன்று முறை வஜ்ராங்கி அலங்காரம் செய்யப்படுகிறது. இதில் தமிழ் புத்தாண்டு தினமான வியாழக்கிழமை வஜ்ராங்கியில் பெருமாள் சேவை சாதிக்கவுள்ளாா்.
நாள் முழுவதும் வஜ்ராங்கி அலங்காரத்தில் பெருமாளை வழிபடமுடியும். மாலை 6 மணிக்கு சுபகிருது ஆண்டு பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்வு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.