மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அடையாளம் தெரியாத இளைஞா் உயிரிழப்பு
காரைக்கால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அடையாளம் தெரியாத இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
காரைக்கால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அடையாளம் தெரியாத இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து காரைக்கால் நகரக் காவல் நிலையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காரைக்கால் பேருந்து நிலையத்தில் சுமாா் 28 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத இளைஞா் மயக்க நிலையில் கிடப்பதாக கடந்த மாா்ச் 25-ஆம் தேதி கிடைத்த தகவலின்பேரில், போலீஸாா் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனா்.
எனினும், அவா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இறந்தவா் யாா் என்று தெரியவில்லை. விவரம் தெரிந்தோா் 04368- 222402 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.