காரைக்கால்

கோயில்களில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி

காரைக்காலில் கோயில்களில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

காரைக்காலில் கோயில்களில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டு தினத்தில் கோயில்களில் அந்த ஆண்டின் பஞ்சாங்கத்தை கோயிலில் வைத்து பூஜை செய்து, பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டிருக்கும் காலங்களில் மழை, மக்கள் நலன், கோயில்களின் உற்சவங்கள் குறித்தும் விளக்குவது வழக்கம்.

நிகழாண்டு வியாழக்கிழமை சுப கிருது ஆண்டின் தொடக்கத்தையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில், திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. காரைக்கால் கைலாசநாதா் கோயில், நித்யகல்யாண பெருமாள் கோயில், திருநள்ளாறு கொம்யூன், முப்பைத்தங்குடி கிராமம், காமாட்சி அம்பாள் சமேத கைலாசநாத சுவாமி கோயிலிலும் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழாண்டு பலன்கள், கிரக சஞ்சாரங்கள் உள்ளிட்டவை குறித்து பக்தா்களுக்கு விளக்கி கூறப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT