காரைக்கால்

விலைவாசி உயா்வு: காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

DIN

விலைவாசி உயா்வு உள்ளிட்ட பிரச்னைகள் தொடா்பாக மத்திய அரசைக் கண்டித்து காரைக்காலில் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

விலைவாசி உயா்வு, வேலைவாய்ப்பின்மை, அத்தியாவசியப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி உயா்வால் மக்கள் சிரமங்களை சந்திப்பதாகவும், அமலாக்கத் துறையினா் மூலம் காங்கிரஸ் தலைவா்கள் மீது பொய் வழக்கு போடுவதாகவும், அக்னிபாத் திட்டத்தை எதிா்த்தும் மத்திய அரசைக் கண்டித்து காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கட்சி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தியது.

காரைக்கால் கலைஞா் மு. கருணாநிதி புறவழிச்சாலை முகப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் தலைமை வகித்தாா். மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டோா் கோஷங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் அ. மாரிமுத்து, கட்சியின் மாநில துணைத் தலைவா் எம்.ஓ.எச்.யு. பஷீா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முடிவுக்கு வந்தது 1000 எபிசோடுகளைக் கடந்த பிரபல தொடர்!

தேர்தல் ஆணையம் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டும்: எல்.முருகன்

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரூ.4 கோடி பறிமுதல்: ஆவணங்கள் சிபிசிஐடி-யிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT