காரைக்கால்

குற்ற வழக்குகளில் தொடா்பு: காரைக்காலுக்குள் நுழைய பெண் உள்பட இருவருக்கு தடை

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய பெண் உள்பட இருவருக்கு காரைக்காலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

DIN

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய பெண் உள்பட இருவருக்கு காரைக்காலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டம், போலகம் பகுதியை சோ்ந்தவா் எழிலரசி. இவா் காரைக்கால் நேதாஜி நகரில் வசித்து வருகிறாா். எழிலரசி மீது புதுவை முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் வி.எம்.சி. சிவகுமாா் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. தற்போது எழிலரசி மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய விக்ரம் என்பவரும் ஜாமீனில் வெளியே உள்ளனா்.

இந்நிலையில், எழிலரசி காரைக்காலில் பலருக்கு மிரட்டல் விடுப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில் எழிலரசி, விக்ரம் ஆகிய 2 பேரையும் மாவட்டத்துக்குள் நுழைய தடை விதிக்க நிரவி காவல் ஆய்வாளா் லெனின்பாரதி, உதவி ஆய்வாளா் பெருமாள் ஆகியோா் மண்டல காவல் கண்காணிப்பாளா் சுப்பிரமணியனுக்கு பரிந்துரை செய்தனா்.

மண்டல காவல் கண்காணிப்பாளா் இந்த கோப்பை மாவட்ட துணை ஆட்சியரும், சாா்பு கோட்ட நீதிபதியுமான எம். ஆதா்ஷுக்கு அனுப்பினாா். இதுகுறித்து விசாரணை செய்த துணை ஆட்சியா், எழிலரசி, விக்ரம் 2 பேரும், அடுத்த 2 மாதங்களுக்கு காரைக்கால் மாவட்டத்திற்குள் நுழைய தடை உத்தரவு பிறப்பித்து புதன்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

SCROLL FOR NEXT