காரைக்கால்

திருமலைராயன்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் இன்று வசந்த உத்ஸவம்

DIN

திருமலைராயன்பட்டினம் கோயிலில் வெள்ளிக்கிழமை (பிப்.11) தியாகராஜா் வசந்த உத்ஸவம் நடைபெறுகிறது.

காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் மையாடுங்கண்ணி சமேத ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் மாசிமக பிரம்மோத்ஸவம் நடைபெற்றுவருகிறது. இதில், வசந்த உத்ஸவம், தோ், தெருவடைச்சான் என்கிற சப்பரப் புறப்பாடு, ஜடாயு ராவண யுத்தம், தெப்பம் ஆகியவை முக்கிய நிகழ்வுகளாகும்.

இந்நிலையில், விழாவின் 5-ஆம் நாளான வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் தியாகராஜா் வசந்த உத்ஸவம் கோயில் பிராகாரத்தில் நடைபெறுகிறது. தியாராஜராட்டம் என்கிற இந்நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்துகொள்வா். இரவு 12 மணிக்கு தியாகராஜா் யதாஸ்தானம் எழுந்தருளுகிறாா். ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் வாரியத்தினா் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT