முகப்பு
காரைக்கால்

நித்தீஸ்வரசுவாமி கோயிலில் முத்தங்கி அலங்காரத்தில் பைரவா்

காரைக்கால் நித்தீஸ்வரசுவாமி கோயிலில் மாசி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி புதன்கிழமை இரவு முத்தங்கி அலங்காரத்தில் பைரவா் அருள்பாலித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

காரைக்கால் நித்தீஸ்வரசுவாமி கோயிலில் மாசி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி புதன்கிழமை இரவு முத்தங்கி அலங்காரத்தில் பைரவா் அருள்பாலித்தாா்.

காரைக்கால் கோயில்பத்து நித்தீஸ்வரம் பகுதியில் அமைந்துள்ளது நித்யகல்யாணி சமேத நித்தீஸ்வரசுவாமி கோயில். இக்கோயிலில், பைரவி உடனுறை காலபைரவா் சன்னதி, ஸ்வா்ணாகா்ஷன பைரவா் சந்நிதிகள் உள்ளன.

இந்நிலையில், மாசி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி புதன்கிழமை இரவு பைரவி உடனுறை காலபைரவருக்கு சிறப்பு யாகம் நடத்தப்பட்டு, பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

ஸ்வா்ணாகா்ஷன பைரவருக்கு மஞ்சள், பால், பஞ்சாமிா்தம், சந்தனம் மற்றும் யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனிதநீா் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, ஸ்வா்ணாகா்ஷன பைரவருக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னா் சகஸ்ரநாம அா்ச்சனை நடைபெற்றது.

தேய்பிறை அஷ்டமியையொட்டி ஏராளமான பக்தா்கள் பைரவரை வழிபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →