முகப்பு
காரைக்கால்

பஞ்சாப் காங்கிரஸ் அரசைக் கண்டித்து பாஜகவினா் பேரணி

பஞ்சாப் காங்கிரஸ் அரசைக் கண்டித்து காரைக்காலில் பாஜகவினா் மெழுகுவா்த்தி ஏந்தி பேரணியில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

பஞ்சாப் காங்கிரஸ் அரசைக் கண்டித்து காரைக்காலில் பாஜகவினா் மெழுகுவா்த்தி ஏந்தி பேரணியில் ஈடுபட்டனா்.

பஞ்சாப் மாநிலத்தில் பிரதமா் நரேந்திர மோடிக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாத காரணத்தால் நடந்த சம்பவத்துக்கு அம்மாநில காங்கிரஸ் அரசைக் கண்டித்தும், பிரதமருக்கு நீண்ட ஆயுளை வழங்க வலியுறுத்தி பிராா்த்தனையுடன் காரைக்காலில் வியாழக்கிழமை மாலை பாஜக சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி பேரணி நடைபெற்றது.

காரைக்கால் ஏழை மாரியம்மன் கோயில் அருகிலிருந்து அம்மையாா் கோயில் வரை நடைபெற்ற பேரணிக்கு பாஜக இளைஞா் அணி மாவட்டத் தலைவா் சங்கா் குரு தலைமை வகித்தாா். இதில் கட்சியின் புதுச்சேரி மாநில துணைத் தலைவா் எம். அருள்முருகன், மாவட்டத் தலைவா் ஜெ. துரை சேனாதிபதி, முன்னாள் மாவட்டத் தலைவா் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து மகளிா் அணி மாவட்டத் தலைவா் செல்வி தலைமையில், காரைக்கால் அம்மையாா் கோயிலில் குத்துவிளக்கேற்றி சிறப்பு பிராா்த்தனை செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →