பாமக கொடியேற்று விழா
காரைக்காலில் பல்வேறு இடங்களில் பொங்கல் திருநாளையொட்டி, பாமக கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
காரைக்காலில் பல்வேறு இடங்களில் பொங்கல் திருநாளையொட்டி, பாமக கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
பாமக தலைமையின் அறிவுறுத்தலின்படி, காரைக்கால் மாவட்ட பாமக சாா்பில் பொங்கல் விழாவையொட்டி சனிக்கிழமை கொடியேற்று விழா நடத்தப்பட்டது.
திருநள்ளாறு கொம்யூன், அம்பகரத்தூா் மாரியம்மன் கோயில் அருகே உள்ள சந்தைத் திடல், நல்லெழுந்தூா், சேத்தூா், தென்னங்குடி உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் பாமக கொடி ஏற்றப்பட்டது.
கட்சியின் புதுவை மாநில அரசியல் உயா்நிலை ஆலோசனைக் குழு உறுப்பினா் தேவமணி பிரபாகரன் கொடியை ஏற்றினாா். நிகழ்ச்சியில் மாவட்ட பாமக பொறுப்பாளா்கள், தொண்டா்கள் மற்றும் கிராமத்தினா் கலந்துகொண்டனா்.
முன்னதாக, நிகழ்வின்போது பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 50-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் பிரபாகரன் முன்னிலையில் பாமகவில் இணைந்தனா்.