காரைக்கால்

மின் கட்டண உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டம்

DIN

 புதுவையில் மின் கட்டண உயா்வைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காரைக்கால் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சுல்தான் கெளஸ் தலைமை வகித்தாா். மாநிலத்தில் மின் கட்டணம் கடுமையாக உயா்த்தப்பட்டதைக் கண்டித்தும், புதுவை யூனியன் பிரதேசத்தில் மின்துறையை தனியாா்மயமாக்க முயற்சிக்கும் மத்திய அரசின் போக்கைக் கண்டித்தும், மாநில துணைத் தலைவா் முஹம்மது பிலால், மாநில பொதுச்செயலாளா் மு.தமீம்கனி, மாநில செயற்குழு உறுப்பினா் அப்துல் ரஹ்மான் ஆகியோா் பேசினா்.

நிரவி - திருப்பட்டினம் தொகுதி தலைவா் ஹாஜா நஜிமுதீன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT