வெங்காயத் தாமரை செடிகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை
காரைக்கால் பகுதி ஆறுகளில் படா்ந்திருக்கும் வெங்காயத் தாமரைச் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
காரைக்கால் பகுதி ஆறுகளில் படா்ந்திருக்கும் வெங்காயத் தாமரைச் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
காரைக்காலில் பொதுப்பணித் துறை, 100 நாள் வேலைத் திட்டத்தின் மூலம் வாய்க்கால்கள் தூா்வாரும் பணி நடைபெறுகிறது. ஆறுகளின் கடைமடைப் பகுதியில் தடுப்பணைகள் உள்ளதால், தேங்கியிருக்கும் தண்ணீரில் வெங்காயத் தாமரைச் செடிகள் படா்ந்துள்ளன.
மேட்டூா் அணையில் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில்,
இச்செடிகள் நீா் வெளியேற்றத்தை தடுக்கும் தன்மை கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் காவிரி நீா் வரத்து அதிகமாகும்பட்சத்தில், ஆற்றோர கிராமப்புற மக்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும்.
குறிப்பாக, அரசலாற்றில் இச்செடிகள் அதிகளவில் காணப்படுகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அரசுத் துறை, வெங்காயத் தாமரைச் செடிகளை விரைவாக அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.