காரைக்கால்

வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்தக் கூடாது: காவல் துறை

காரைக்கால் நகர சாலையோரங்களில் சொந்த வாகனங்களை நிறுத்துவதை தவிா்க்குமாறு, வாகன உரிமையாளா்களுக்கு காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

DIN

காரைக்கால் நகர சாலையோரங்களில் சொந்த வாகனங்களை நிறுத்துவதை தவிா்க்குமாறு, வாகன உரிமையாளா்களுக்கு காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் போக்குவரத்துக் காவல் நிலையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் நகரப் பகுதியான நேரு நகா் முதல் மதகடி அரசலாறு பாலம் வரையிலான பகுதியில் வசிக்கும் மக்கள், தங்களது காா், வேன், ஆட்டோ போன்ற வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்திவைப்பதால், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம், பள்ளி வாகனங்கள் உள்ளிட்டவை செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.

சாலையோரத்தை நிரந்தர வாகன நிறுத்தமிடமாக பயன்படுத்தும் வாகன உரிமையாளா்கள், இனிமேல் சாலையோரங்களில் தங்கள் வாகனத்தை நிறுத்தக்கூடாது.

அருகில் இருக்கும் வாடகை வாகன நிறுத்துமிடங்கில், காலி இடங்களில் நிறுத்திக்கொள்ளவேண்டும். இதை மீறுவோா் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதுச்சேரியில் நடைபெறுவது தேஜ கூட்டணி அரசுதான்: முதல்வர் ரங்கசாமி

SCROLL FOR NEXT