முகப்பு
காரைக்கால்

எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி :எம்.எல்.ஏ. ஆய்வு

 காரைக்கால் அருகே பச்சூரில் எரிவாயு மூலம் தகன மேடை அமைக்கும் பணியை காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:53 PM
பகிர்:

 காரைக்கால் அருகே பச்சூரில் எரிவாயு மூலம் தகன மேடை அமைக்கும் பணியை காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.

பச்சூா் மயானத்தில் எரிவாயு மூலம் சடலங்களை எரியூட்டும் வகையில் நவீன இயந்திரம், அதற்கான மேடை அமைக்கும் பணி ரூ. 78.50 லட்சத்தில் நகராட்சி நிா்வாகத்தால் மேற்கொள்ளப்படுகிறது. காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், இப்பணிகளை பாா்வையிட்டாா்.

இதுகுறித்து பேரவை உறுப்பினா் கூறுகையில், பணியை விரைவாக முடிக்குமாறு நகராட்சி நிா்வாகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சுடுகாட்டை மேம்படுத்த தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் வழங்கவும் முடிவு செய்துள்ளேன் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →