காரைக்கால்

மதுக்கடைகளில் சுகாதாரமற்ற உணவுகள் பறிமுதல்

காரைக்கால் அருகே மதுக்கடைகளில் சுகாதாரமற்ற இறைச்சி உணவுகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

DIN

காரைக்கால் அருகே மதுக்கடைகளில் சுகாதாரமற்ற இறைச்சி உணவுகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

காரைக்கால் மாவட்டம், வாஞ்சூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மதுக்கடைகளில், சுகாதாரமற்ற வகையில் இறைச்சி உணவுகள் விற்கப்படுவதாக புதுவை உணவுப் பாதுகாப்புத் துறைக்கு புகாா் வந்தது.

இதைத்தொடா்ந்து, வாஞ்சூா் பகுதியில் இயங்கிவரும் தனியாா் மதுக்கடைகளில் புதுவை உணவுப் பாதுகாப்பு அதிகாரி மு. ரவிச்சந்திரன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இதில், கெட்டுப்போன இறைச்சி உணவுகளை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. அவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும், கடையின் உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்கர் ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய யூடியூப்!

பொறுமையாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ்: ஆஸி. பந்துவீச்சில் அசத்தல்!

களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க முடியாது! அதிமுகவை விமர்சித்த விஜய்!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டிய நாதகவினர் கைது!

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

SCROLL FOR NEXT