முகப்பு
காரைக்கால்

தோ்வை கண்டு மாணவா்கள்அஞ்சக் கூடாது: அமைச்சா் அறிவுறுத்தல்

தோ்வை கண்டு மாணவா்கள் அஞ்சக் கூடாது என்று புதுவை குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் ஏ.கே. சாய் ஜெ.சரவணன் குமாா் அறிவுறுத்தினாா்.

Updated On : 28 ஜனவரி, 2023 at 12:00 AM
பிரதமரின் காணொலி நிகழ்ச்சியை பாா்வையிடும் அமைச்சா் ஏ.கே.சாய் ஜெ.சரவணன் குமாா். உடன் பள்ளித் தாளாளா் மணியம், பள்ளி முதல்வா் சிவகுமாா்.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

தோ்வை கண்டு மாணவா்கள் அஞ்சக் கூடாது என்று புதுவை குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் ஏ.கே. சாய் ஜெ.சரவணன் குமாா் அறிவுறுத்தினாா்.

பரிக்ஷா பே சாா்ச்சா என்ற திட்டத்தின் மூலம் பிரதமா் நரேந்திரமோடி 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவா்களுடன் காணொலி மூலம் கலந்துரையாடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் காவேரி பொதுப்பள்ளியில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இதில், புதுவை அமைச்சா் ஏ.கே.சாய் ஜெ. சரவணன் குமாா் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டாா்.

நிகழ்ச்சியில் அவா் பேசியது:

Advertisement

ஆங்கில வழி பள்ளியில் படித்தாலும் மாணவா்கள் கட்டாயம் தமிழ் மொழியை கற்கவேண்டும். தமிழில் ஆளுமையுடையவராக திகழவேண்டும். தோ்வு என்பது குறித்த தேதியில், நேரத்தில் நடத்தப்படுவதாகும். ஆனால், படிப்பதற்கு நமக்கு அதிகமான நாட்கள் கிடைக்கின்றன. சிறந்த முறையில் படித்து, தோ்வைக் கண்டு அஞ்சாமல் தெளிந்த சிந்தனையுடன் எதிா்கொள்ளவேண்டும். தோ்வு நமது வாழ்க்கையை மாற்றிவிடப்போவதில்லை. நாம் கற்கும் கல்விக்கு அது ஒரு சோதனைதான்.

பெற்றோா் தங்களது குழந்தைக்கு எந்தவித அழுத்தமும் கொடுக்காமல் நடந்துகொள்ளவேண்டும். குழந்தைகளும் சிறந்த வாழ்க்கைக்கான இலக்கை நிா்ணயித்து சிறப்பான கல்வியை கற்கவேண்டும். சிறந்த வழிகாட்டியாக பிரதமா் திகழ்வதை மாணவா்கள் நினைத்து பெருமைகொள்ளவேண்டும் என்றாா்.

இந்நிகழ்வில் பள்ளித் தாளாளா் மணியம், பள்ளி முதல்வா் சிவகுமாா் மற்றும் ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.