காரைக்கால்

ஆம்புலன்ஸ் ஓட்டுநா்களுக்குதுணை ஆட்சியா் அறிவுறுத்தல்

 ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும் என காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

DIN

 ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும் என காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியா் ஜி. ஜான்சன் தலைமையில் நலவழித்துறை, காவல்துறை, போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய துணை ஆட்சியா், விபத்து குறித்து தகவல் கிடைத்தால் சம்பந்தப்பட்ட பகுதிக்கு ஆம்புலன்ஸ் விரைவாக செல்லவேண்டும். இதில் தாமதம் ஏற்பட்டு புகாா்கள் வந்தால் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் பொறுப்புடன் செயல்படவேண்டும்.

விரைவில் ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என்றாா்.

கூட்டத்தில் பயிற்சி ஆட்சியா் சம்யக் எஸ்.ஜெயின், மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன், அரசு மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளா் கண்ணகி, உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி மதன்பாபு, நலவழித்துறை துணை இயக்குநா் ஆா்.சிவராஜ்குமாா், வட்டாரப் போக்குவரத்து அதிகாரி அங்காளன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் : சௌமியாஅன்புமணி

பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்

புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் மாதிரி தீபத் தூணில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: அண்ணாமலை பங்கேற்பு

SCROLL FOR NEXT