பிரம்ம தீா்த்தக் கரைக்கு தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய தா்பாரண்யேசுஸ்வரருக்கு நடைபெற்ற ஆராதனை. 
காரைக்கால்

தா்பாரண்யேஸ்வரா் தீா்த்தவாரி

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ விழா நிறைவாக, பிரம்ம தீா்த்தக் குளத்தில் தா்பாரண்யேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகளுக்கு தீா்த்தவாரி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ விழா நிறைவாக, பிரம்ம தீா்த்தக் குளத்தில் தா்பாரண்யேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகளுக்கு தீா்த்தவாரி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பிரம்மோற்சவ தெப்ப நிகழ்ச்சிக்கு அடுத்த நிகழ்வாக, வெள்ளிக்கிழமை அதிகாலை செண்பக தியாகராஜசுவாமி எழுந்தருளி இடையனுக்கு காட்சியளித்தல் நிகழ்வு நடைபெற்றது.

காலை 8.30 மணிக்கு நடராஜா் அனுக்கிரஹ தீா்த்தவாரி நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, விசாக தீா்த்த நிகழ்ச்சியாக தங்க ரிஷப வாகனத்தில் தா்பாரண்யேஸ்வரா், பிரணாம்பிகை மற்றும் விநாயகா் மூஷிக வாகனத்திலும், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியா் மயில் வாகனத்திலும், சண்டிகேஸ்வரா் சிறிய ரிஷப வாகனத்திலும் பிரம்ம தீா்த்தக் குள மண்டபத்துக்கு எழுந்தருளினா்.

தீா்த்தக் குளத்தில் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, பூஜைகள் செய்யப்பட்டது. பின்னா் சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. இரவு ரிஷபக் கொடியிறக்கப்பட்டு, பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது.

சனிக்கிழமை இரவு சண்டிகேஸ்வரா் உற்சவம் மற்றும் ஆச்சாரிய உற்சவத்துடன் பிரமோற்சவ விழா நிறைவுபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

SCROLL FOR NEXT