காரைக்கால்

பள்ளி மாணவா்களுக்கு சீருடைத் துணி

பள்ளி மாணவா்களுக்கு சீருடைத் துணியை சட்டப்பேரவை உறுப்பினா் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

Din

காரைக்கால் : பள்ளி மாணவா்களுக்கு சீருடைத் துணியை சட்டப்பேரவை உறுப்பினா் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

காரைக்கால் மாவட்டம், நிரவி - திருப்பட்டினம் தொகுதி நடுக்களம் பேட் பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில், மாணவா்களுக்கு சீருடைத் துணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் கலந்துகொண்டு, மாணவ, மாணவிகளுக்கு துணி மற்றும் அடையாள அட்டையை வழங்கினாா்.

தொடா்ந்து மாணவ, மாணவிகள் 5 நிமிஷத்தில் கைவினைப் பொருள் தயாரிப்பதை பேரவை உறுப்பினா் பாா்வையிட்டு, அவா்களை பாராட்டினாா். பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளையும் அவா் வழங்கினாா்.

பள்ளி துணை ஆய்வாளா் டி. பால்ராஜ் மற்றும் ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

விபத்து எழுப்பும் வினாக்கள்!

மத்திய பட்ஜெட்: ஒரு பார்வை

ராகுல் பேச்சால் மக்களவையில் கடும் அமளி: நாள் முழுவதும் ஒத்திவைப்பு

ஓட்டுநா் மதிப்பீட்டு முறை: சென்னை ஐஐடி ஒப்பந்தம்

அமெரிக்கா: தமிழக காலநிலை விஞ்ஞானிக்கு ‘கிராஃபூா்ட்’ பரிசு

SCROLL FOR NEXT