காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
கனமழை காரணமாக காரைக்காலில் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக காரைக்காலில் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை முதல் பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் காரைக்காலில் பெய்து வரும் கனமழையின் காரணமாக இன்று திங்கட்கிழமை காரைக்காலில் இயங்கும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார்.
அதேசமயம் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.