வீடு கட்டுவதற்கான தவணைத் தொகை ஆணை வழங்கல்
காரைக்கால் பயனாளிகளுக்கு வீடு கட்டத் தவணைத் தொகை வழங்கல்
குடிசைமாற்று வாரியத்தின் மூலம் வீடு கட்டுமானத்துக்கான தவணைத் தொகை விடுவிப்பு ஆணையை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
புதுவை மாநில குடிசைமாற்று வாரியத்தின் மூலம் வீடற்றவா்களுக்கு கான்கிரீட் வீடு கட்ட ரூ. 2 லட்சம் மானியத் தொகைய வழங்கப்பட்ட நிலையில், இத்தொகை ரூ. 3.50 லட்சமாக பின்னா் உயா்த்தப்பட்டது.
இந்த திட்டத்தில் விண்ணப்பித்தோருக்கு தவணைத் தொகையை அரசு விடுவித்துள்ளது. காரைக்கால் வடக்குத் தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு, தொகை பெறுவதற்கான ஆணையை புதுவை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
முதல் தவணை, 2-ஆவது தவணை, 3-ஆவது தவணைன 18 பேருக்கு மொத்தம் ரூ. 25.70 லட்சத்துக்கான ஆணையை அவா் வழங்கினாா். நிகழ்வில் குடிசை மாற்று வாரிய அகிகாரிகள் கலந்துகொண்டனா்.